கடந்தவாரம் வெளியான ‘கப்பல்’ படத்தில் ‘கரகாட்டக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஊரு விட்டு ஊரு வந்து’ என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியிருந்தார்கள். கங்கை அமரன் இயக்கியிருந்த இந்தபடத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். 1989ல் வெளியான இந்தப்படமும் பாடலும் மிகவும் பேசப்பட்டன.
தற்போது இந்தபாடலை தனது அனுமதி பெறாமல் ‘கப்பல்’ படத்தில் பயன்படுத்தியுள்ளதாக ஷங்கர் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ‘கப்பல்’ படத்தின் சக்சஸ் மீட்டின்போது இந்தப்படாளை முறைப்படி அனுமதி வாங்கி பயன் படுத்தியதாக அந்தப்படத்தின் இயக்குனர் கார்த்திக் ஜி.கிரிஷ் கூறினார்.
தற்போது இளையராஜா தொடுத்துள்ள வழக்கிற்கு தாங்கள் அந்தாபாடல் உரிமையை வைத்திருக்கும் ஆடியோ நிறுவனத்திடம் இருந்து முறைப்படி வாங்கியிருப்பதாக, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூறியிருக்கிறார்கள். அப்படியானால் உண்மையான ஆடியோ ரைட்ஸ் யாருக்கு சொந்தம்? இந்த வழக்குதான் விடைசொல்ல வேண்டும்..