செல்ப் கண்ட்ரோலை இழந்து எல்லை மீறும் சமந்தா..!

கத்தி படம் வெற்றியா, இல்லை அதுகுறித்த சர்ச்சையா இதையெல்லாம் பற்றி அலட்டிக்கொள்ளாமல் தனது அடுத்த படமாக ‘கோலிசோடா’ புகழ் விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரமுடன் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் சமந்தா.

படப்பிடிப்பு நாட்களில் டயட்..டயட் என உடலை வருத்தும் சமந்தா சென்னைக்கு வந்துவிட்டால் போதும்.. கொண்டுவா இட்லி, தோசை, பொங்கல், வடையை, என ஒரு பிடி பிடிக்க இருப்பதாக சொல்கிறார். இனி செல்ப் கண்ட்ரோல் எதற்கு..? உடம்பு பிரச்னைனயா அது வரும்போது பார்த்துகொள்ளலாம்” என களத்தில் இறங்கிவிட்டார்.