மாதுரி தீட்சித்தை பணம் கேட்டு மிரட்டிய சர்வர் கைது..!

ஒரு காலத்தில் பாலிவுட்டின் கனவுக்கன்னியாக இந்தி ரசிகர்களை மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களையும் மிரட்டியவர் மாதுரி தீட்சித். ஆனால் அவரையே, ஒரு ஹோட்டல் சர்வர் மொபைல் எஸ்.எம்.எஸ் மூலமாக பணம் கேட்டு மிரட்டி, தற்போது போலீசால் கைது செய்யப்பட்டுள்ளான். பிரபலங்கள் ஏதாவது ஹோட்டல்களில் தங்கும்போது அவர்களது மொபைல் நம்பரை தெரிந்துகொண்டு இதுபோல சிலர் ஈடுபடுவது வழக்கம் தான்.

அதிலும் இவன் தான் பிரபல மும்பை டான் சோட்டா ராஜனின் ஆள் எனவும் பணம் கொடுக்கவில்லைஎன்றால் விளைவு மோசமாக இருக்கும் எனவும் மிரட்டியுள்ளான். இதுகுறித்து மாதுரி தீட்சித்தின் உதவியாளர் புகார் கொடுக்க, மும்பை போலீசார் அவனை பொறிவைத்து பிடித்து கைது செய்துள்ளனர்.