சென்னையில் திருவையாறு-10 நிகழ்ச்சி ; டிச-18ல் கோலாகல துவக்கம்..!

ஒவ்வொரு வருடமும் சென்னையில் மார்கழி மாதம் இசை ரசிகர்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது என்றால் அதற்கு காரணம் ‘சென்னையில் திருவையாறு’ இசை விழா தான். பிரபலமான லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினர், “சென்னையில் திருவையாறு’ என்ற பெயரில், மார்கழி மாத இசை நிகழ்ச்சியை, கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.

இந்த வருடம் 10ஆம் ஆண்டு துவக்க விழா, சென்னை காமராஜர் அரங்கத்தில் வரும் டிசம்பர்-18ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்க இருக்கிறது. துவக்க நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் சிறப்பு விருந்தினராக, பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைக்க உள்ளார்.

டிச-18ல் தொடங்கும் இந்த உற்சவம் டிச-25 வரை தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட திருவிழா ஜெய்சங்கர் அவர்களுக்கு வாழ்நாள் இசை சாதானையாளர் விருதாக ‘இசை ஆழ்வார்’ என்கிற படமும் தங்கப்பதக்கமும் வழக்கி கௌரவிக்கப்பட இருக்கிறது.