ஒரே நேரத்தில் தமிழ், கன்னடத்தில் நடிக்கும் இனியா…!

சமீபத்தில் வெளியான ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருந்தார் நடிகை இனியா.. தேசிய விருதுபெற்ற படத்தில் நடித்திருந்த நடிகையின் தற்போதைய நிலை இதுதான். ஆனாலும் மனம் தளராத இனியாவுக்கு தற்போது தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

கன்னட இளம் நடிகர்களான கணேஷ் மற்றும் வசிஷ்டா ஆகியோருடன் இணைந்து நடிக்கிறா இனியா.. ஜெகதீஷ் குமார் என்னும் கன்னட இயக்குனர் இயக்கும் இந்தப்படத்திற்கு தமிழில் ‘கரையோரம்’ என்றும் கன்னடத்தில் ‘அலோன்(alone) என்றும் பெயரிடப்பட்டுள்ளது.. தம்பிராமையா, மனோபாலா, சுனில் ஷெட்டி உட்பட பலரும் இந்தப்படத்தில் நடிக்கிறார்கள். மங்களூரில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.