“ராதாரவியை முதலில் வெளியேற்றுங்கள்” – சரத்குமாரிடம் சீறிய விஷால்..!

நடிகர்சங்கத்தில் புகைந்துவரும் பிரச்சனையை நாம் ஏற்கனவே கோடிட்டு காட்டியிருந்தோம்.. நாசர் குறித்து ராதாராவியின் அநாகரிக பேச்சை நாம் வீடியோ ஆதாரத்துடன் சொல்லியிருந்தோம். இதற்காக ராதாரவி மற்றும் காளை ஆகியோர் மீது மேல் நடவடிக்கை எடுக்க சொல்லும் முனைப்புகளில் இறங்கினார் விஷால்.

ஆனால் ராதாரவிக்கு ஆதரவான சரத்குமார் தலைமை விஷாலின் நடவடிக்கைகளை விரும்பவில்லை.. இது இப்போதல்ல.. கமலின் விஸ்வரூபம் பிரச்சனையில் ஆரம்பத்தில் விஷால் கொடுத்தபோதே இந்த பனிப்போர் துவங்கி விட்டது. அதனால் தான் திருச்சியில் நடந்த தனது கட்சிகூட்டத்தில் பேசிய சரத்குமார், “தொடர்ந்து இதுபோன்று நடிகர்சங்கத்தைப்பற்றி அவதூறு பேசிவந்தால் அவர் நடிகர்சங்ககத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்” என எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் தரும் விதமாக நேற்று விஷால் வெளியிட்ட அறிக்கையில், சீற்றம் காட்டியிருந்தார். “சரத்குமாரின் பேச்சு என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நான் அவதூறு பேசியதாக ஆதாரம் இருந்தால் தாராளமாக சரத்குமார் என்னை வெளியேற்றலாம். குமரிமுத்து அவதூறாக பேசினார் என்றுதானே அவரை சங்கத்தில் இருந்து நீக்கினீர்கள்..? அப்படியானால் நாசரின் மீது அவதூறாக பேசிய ராதாரவியையும் கே.என்.காளையையும் முதலில் சங்கத்தில் இருந்து வெளியேற்றுங்கள்..” என ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.