மீண்டும் துளிர்விடும் நயன்தாராவின் தாய்மொழி பாசம்…!

தாய்மொழியாக இருந்தாலும் சம்பளம் குறைவு என்பதால் கால்ஷீட்டை காரணம் காட்டியே மலையாளப் படங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகிறார்கள் அங்கிருந்து கிளம்பிவரும் நடிகைகள். அதில் முக்கிய இடம் பிடிப்பவர் தமிழின துரோகி என முத்திரை குத்தப்பட்ட அசின்..

ஆனால் நயன்தாராவோ மலையாளத்தில் தொடர்ந்து நடிக்காவிட்டாலும்கூட தன்னை வளர்த்துவிட்ட தமிழையும் தெலுங்கையும் மறந்து ஒருபோதும் இந்திப்பக்கம் போகவில்லை. இப்போது மீண்டும் ஒரு மலையாளப்படத்தில் நடிக்க இருக்கிறார் நயன்தாரா. அந்தவகையில் 2௦1௦க்குப்பிறகு நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் மலையாளத்தில் நுழைகிறார் நயன்தாரா.

ஏற்கனவே ‘பாடிகார்டு’ மூலம் நயன்தாராவுக்கு வெற்றியை தந்த இயக்குனர் சித்திக் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். தான் .. நயன்தாரா ஜோடியாக நடிக்க இருப்பது மெகாஸ்டார் மம்முட்டியுடன்.. பத்து வருடங்களுக்கு முன்பே மம்முட்டியுடன் ‘தஸ்கரவீரன்’, ‘ராப்பகல்’ என இரண்டு படங்களில் நடித்த நயன்தாரா, இப்போது மூன்றாவது முறையாக அவருடன் ஜோடிசேர்கிறார்.