விஜய், முருகதாஸை திருப்பி தாக்கும் கத்தி..!

தண்ணீர் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கத்தி திரைப்படம் போகிற போக்கில் 2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றி ஒரு வேகத்தில் கருத்தை சொல்லிவிட தற்போது விஜய்மீதும் முருகதாஸ் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..

மதுரை நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் “2ஜி அலைக்கற்றை சம்பந்தமான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் அது நிரூபிக்கப்பட்டதாக கடந்த ஆட்சியாளர்களை குற்றவாளிகளாக கேவலப்படுத்தும் விதமாக வசனம் இடம்பெற்றிருக்கிறது. மேலும் இது நீதிமன்றத்தையும் அவமதிக்கும் செயலாகும்” என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை வரும் நவம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.