குரோம்பேட்டை ‘வெற்றி’ திரையரங்கில் நிறுவப்பட்ட விஜய் சிலை..!

இப்போதைய நடிகர்களில் முதன்முதலாக சிலை வைக்கப்படுகிறதென்றால், அந்த சிறப்பு நடிகர் விஜய்க்குத்தான். இன்று காலை குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் வளாகத்தில் விஜய்யின் சிலை வெற்றிகரமாக நிறுவப்பட்டது. இந்த சிலை திறப்புவிழாவின்போது ‘வெற்றி மற்றும் ராகேஷ்’ தியேட்டர்களின் உரிமையாளரான ராகேஷ் கலந்துகொண்டார்.

இந்த சிலையை நிறுவியுள்ளவர்கள் சென்னையை சேர்ந்த ‘பேஸ்புக் விஜய் பான்ஸ் கிளுப்’ என்னும் முகநூல் குழுவை சார்ந்தவர்கள். இந்த குழுவில் ஆயிரத்திற்கும் மேலானோர் உறுபினர்களாக உள்ளனர். விஜய்க்கு சிலை வடிவமைப்பதில் முனைப்பு காட்டி இந்த வேலையை திறம்பட செய்தவர்களில் முக்கியமானவர்கள் சபரி மற்றும் குரு என்னும் இருவர்.

முதலில் போரூர் ஆலப்பாக்கத்தில் தான் இந்த சிலை வைக்கப்படுவதாக இருந்தது. ஆனால் இடவசதி, அனுமதி காரணமாக தற்காலிகமாக வெற்றி தியேட்டரில் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் கழித்து இந்த சிலை விஜய்யின் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கேயே வைக்கப்பட உள்ளது.