151வது படமாகும் பாக்கியம் பெற்ற ‘மஞ்சப்பை’…!

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ‘மஞ்சப்பை’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ராஜ்கிரணையும் விமலையும் வைத்து தாத்தா, பேரன் என புது கதைக்களத்தில் படத்தை இயக்கியிருந்தார் அறிமுக இயக்குனர் ராகவன். இந்தப்படத்தை திருப்பதி பிரதர்ஸும் சற்குணம் சினிமாஸும். இணைந்து தயாரித்திருந்தன.

இந்தப்படம் மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கில் பிரபல இயக்குனர் தாசரி நாராயணராவ் இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியிருப்பதோடு அதை அவரே இயக்கவும் செய்கிறார். இது தாசரி இயக்கும் 151வது படம் என்பது ‘மஞ்சப்பை’ செய்த பாக்கியம்..

ராஜ்கிரண் நடித்த தாத்தா வேடத்தில் சரண்ராஜ் நடிக்கிறார். ஹீரோவாக விஷ்ணு மஞ்சு நடிக்க அவருக்கு ஜோடியாக மெட்ராஸ்’ புகழ் கேத்தரின் தெரசா நடிக்கிறார். அதேபோல கன்னடத்திலும் இந்தியிலும் ரீமேக் செய்யும் வேலைகளை முன்னரே ஆரம்பித்துவிட்டார் ராக்லைன் வெங்கடேஷ். இந்தி ரீமேக்கில் தாத்தாவாக அமிதாப் பச்சன் நடிப்பார் என சொல்லப்படுகிறது.