ஒரு காலத்தில் விஷாலை போலீஸ் அதிகாரியாக வைத்து ‘சத்யம்’ என்கிற படத்தை இயக்கியவர் தான் ஏ.ராஜசேகர்.. ஒரு காலம் என்றால் ரொம்பவெல்லாம் இல்லை.. ஜஸ்ட் ஏழு வருஷங்களுக்கு முன்னாடி தான். அந்தப்படத்தின் தோல்வியால் இவ்வளவு நாட்கள் வனவாசம் இருந்த ராஜசேகர் தற்போது இயக்கிவரும் படம் தான் ‘உயிரே உயிரே’…
நடிகையும் எம்.பி.யுமான ஜெயபிரதாவின் மகன் சித்து இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஹன்ஷிகா. காதலை மையமாக வைத்து உருவாகும் இந்தப்படம் காதலர்களை திருப்திப்படுத்தாது என்கிறார் ராஜசேகர். காரணம் பெற்றோர்கள் பார்த்து நடத்திவைக்கும் திருமணத்தின் மூலம் கிடக்கும் காதல் தான் வலிமையானது என்பதை சொல்லியிருக்கிறாராம் ராஜசேகர்.