இத்தாலியில் பாடல் படப்பிடிப்பு ; பொங்கலுக்கு வருவாரா ‘ஆம்பள’..?

பொங்கலுக்கு படத்தை வெளியிட்டுவிடவேண்டும் என்கிற முனைப்புடன் தான் செயல்பட்டு வருகிறது சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் உருவாக்கி வரும் ‘ஆம்பள’ படத்தின் டீம்.. அதற்கேற்ற மாதிரி படத்தின் வசனப்பகுதிகளை எல்லாம் படமாக்கி முடித்துவிட்டார்காலாம்.

இன்னும் இரண்டுய் பாடல்கள் மட்டும் தான் பாக்கி. அதை இத்தாலியில் படமாக்க இருக்கிறார்களாம். இதற்காக விஷால், ஹன்ஷிகா இருவரும் இத்தாலி செல்ல இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் தினத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு வருவதாக பிளான்.

ஒரு தயாரிப்பாளராக விஷால் இதுவரை சொன்ன தேதியில் தனது தயாரிப்பில் உருவாகும் படங்களை ரிலீஸ் செய்து வருகிறார். அந்த வகையில் பொங்கல் வெளியீடு என அவர் முன்கூட்டியே அறிவித்துள்ள இந்தப்படமும் சொன்ன தேதியில் ரிலீஸாகும் என்றே தெரிகிறது.