நடிகையை மணக்கமாட்டேன் – பாவனாவை டீலில் விட்ட நடிகர்..?

மலையாளத்தில் அறிமுகமாகி, சித்திரம் பேசுதடி படத்தின் மூலம், தமிழுக்கு வந்தவர், பாவனா. குடும்ப்ப்பாங்கான கதாபாத்திரங்களோடு கவர்ச்சி வேடங்களிலும், பட்டையை கிளப்பினார். இவரது, வேகமான முன்னேற்றம், அப்போது, கோலிவுட்டில் முன்னணியில் இருந்த நடிகைகளுக்கு, கலக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால், என்ன மாயம் நிகழ்ந்ததோ தெரியவில்லை. பாவனா, திடீரென, தமிழ் திரைப்படங்களிலிருந்து, காணாமல் போய் விட்டார். இடையில், அஜீத்தோடு ஜோடி சேர்ந்து, அசல் படத்தில் நடித்தார். அந்த படம், எதிர்பார்த்த அளவு, ஓடவில்லை. அப்படியே கன்னட படங்களுக்கு தாவினார். அங்கும், பெரும்பாலும், கவர்ச்சி வேடங்கள் தான், அவருக்கு கிடைத்தன.

அதைத்தொடர்ந்து கன்னடத்தில் முன்னணி நடிகையாகவும் மாறினார். தற்போது தொடர்ந்து மீண்டும், மலையாள பட உலகத்தின் மீது, கவனத்தை திருப்பிய பாவனா ‘திருவனந்தபுரம் லாட்ஜ்’, ‘ஆங்ரி பேபீஸ் இன் லவ்’ ஆகிய படங்களில் மலையாள நடிகர் அனூப் மேனனுடன் ஜோடியாக நடித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே லவ் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகிவிட்டது என செய்திகள் கசிய ஆரம்பித்தன. ஆனால் தற்போது நடிகர் அனூப் மேனன் ஒரு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், தான் திருமணத்துக்கு தயார் என்றும் ஆனால் தான் திருமணம் செய்யப்போவது நிச்சயமாக ஒரு நடிகையை அல்ல என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் அவர் பாவனாவை டீலில் விட்டுவிட்டார் என்பது உறுதியாக தெரிகிறது.