“சென்னையில் எனக்கு நன்கு தெரிந்த இடம் த்ரிஷா வீடு தான்” – சொல்கிறார் ராணா..!

என்னதான் தனக்கும் ராணாவுக்கும் இடையில் இருப்பது வெறும் நட்புதான் என த்ரிஷா அடுப்பை அணைக்க முயன்றாலும், இன்னொரு பக்கம் அவர்கள் செய்யும் செயல்கள் தீயை அதிகரிக்கவே முயல்கின்றன. சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற SIIMA 2014 விழாவில் ராணா சொன்ன பதிலும் அதை உறுதி செய்ய்யத்தான் செய்கிறது.

விழாவில் த்ரிஷாவின் அருகிலேயே அமர்ந்து அதிக நேரம் பேசிக்கொண்டு விழா நிகழ்ச்சிகளை கவனித்தார் ராணா. முன்னதாக இருவரும் சேர்ந்து ஒரு செல்பியையும் எடுத்து முகநூலில் தட்டிவிட்டார்கள். மேடைக்கு அவரை அழைத்த நிகழ்ச்சி தொகுப்பாளர் சிவா, “சென்னையிலேயே உங்களுக்கு நன்கு பரிச்சயமான இடம் எது” என கேட்க ராணா கொஞ்சமும் தயங்காமல் “த்ரிஷாவின் வீடுதான்” என பதில் சொன்னார்.. இனி நீங்களா உங்க இஷ்டத்துக்கு முடிவு பண்ணிக்குங்க.