அர்னால்டை மயக்கிய ஷங்கர் அவரை இயக்குவாரா..?

ஷங்கர் இயக்கியுள்ள ஐ’ படத்தின் பல காட்சிகளை பார்த்து மிரண்டுபோய்த்தான் அந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு வர சம்மதித்தார் அர்னால்டு. “இந்திய சினிமா நட்சத்திரங்களோடு இந்த மேடையில் இணைந்திருப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். ஷங்கர் அற்புதமான இயக்குநர். நிறைய பாடி பில்டர்கள் இங்கே நடித்துள்ளனர். ஷங்கர் வாய்ப்பு கொடுத்திருப்பதாக கேள்விப்பட்டேன். மகிழ்ச்சி.

நானும் பாடி பில்டராக வந்து பிற்காலத்தில் நடிகனாக வந்தவன் என்பது எனக்கு பெருமை அளிக்கிறது. இங்கே நடிக்க வாய்ப்பு தேடித்தான் வந்துள்ளேன். என்னை வைத்து எப்போது படம் எடுக்கப்போகிறீர்கள். என்னை ஏன், ஷங்கர் நடிப்பதற்காக அழைக்கவில்லை என்று தெரியவில்லை. ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்” என ஷங்கரின் டைரக்ஷனில் தான் நடிக்க விரும்புவதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார் அர்னால்டு.. இதைவிட ஷங்கரின் திறமைக்கான ஒரு மிகப்பெரிய பாராட்டும் அங்கீகாரமும் கிடைத்துவிடுமா என்ன?