விழா மேடையில் இமான் கன்னத்தை கொஞ்சியபடி கிள்ளினார் பிரியா ஆனந்த்..!

ஜெயம்கொண்டான் மூலம் திரையுலகில் தனது வெற்றிப்பயணத்தை ஆரம்பித்த ஆர்.கண்ணன் இயக்கியுள்ள ஐந்தாவது படம் தான் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. விமல், சூரி, பிரியா ஆனந்த், விஷாகா, இனியா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

விழாவில் பேச பிரியா ஆனந்தை அழைத்தபோது எழுந்தவர், “எனக்கு ஒரே ஒரு ஆசை இருக்கு ப்ளீஸ்.. அதை இங்கே நிறைவேற்றிக் கொள்கிறேனே” என்று சொன்னவர்.. இமானின் அருகே சென்று, “செல்லக்குட்டி, புஜ்ஜிக்குட்டி” என கொஞ்சியபடி அவர் கன்னங்களை கிள்ளினார். இதுதான் தனது ஆசை என்று இயக்குனர் கண்ணனிடம் அவ்வப்போது சொல்லியும் வந்தாராம் பிரியா ஆனந்த்..

பிரியா ஆனந்த் தந்த இந்த இன்ப அதிர்ச்சியால் இமானே ஒரு நிமிடம் ஷாக்காகி விட்டார்.. அதுவுமில்லாமல் கீழே பார்வையாளர்கள் வரிசையில் இமானின் மனைவி அமர்ந்திருந்தார்.. பாவம்.. இமானின் நிலையை சொல்லியா தெரியவேண்டும்..?

படத்தில் பங்குபெற்ற நட்சத்திரங்களுடன் சிறப்பு விருந்தினர்களாக இன்றைய இளம் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், ஸ்ரீகாந்த் ஆகியோரும் இயக்குனர்கள் சுசீந்திரன், ரவி மரியா, ‘சுந்தரபாண்டியன்’ பிரபாகரன், மனோபாலா, சிங்கமுத்து உட்பட பலரும் கலந்துகொண்டனர். ‘நாடோடிகள்’ படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாக்கி இருக்கும் ஏழாவது படம் இது.