நன்றி சொன்ன விஜய்.. இன்ப அதிர்ச்சியில் மதுபாலா..!!

‘ரோஜா’, ‘ஜென்டில்மேன்’ படத்தில் நடித்த நடிகை மதுபாலா நீண்ட இடைவெளிக்குப்பின் ‘வாயை மூடி பேசவும்’ படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்திருக்கிறார். அவருக்கு வரவேற்பும் நன்றாக இருக்கிறது. ஆனால் அவருக்கோ விஜய் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துவிடவேண்டும் என்பது மிகப்பெரிய ஆசை.

காரணம் அவர் விஜய்யின் மிகப்பெரிய விசிறியாம். தனது பேட்டிகள் பலவற்றில் விஜய்யை பற்றி ஏதாவது பாராட்டி புகழ்ந்துகொண்டே இருப்பார். அப்படி ஒரு பேட்டியை ஏதேச்சையாக பார்த்த விஜய், உடனே மதுபாலாவை போனில் தொடர்புகொண்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

விஜய் தன்னுடன் பேசுவார் என எதிர்பார்த்திராத மதுபாலா, இதனால் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார். இது குறித்து டிவிட்டரில் “விஜய் ரியல் ஹீரோ” என சொல்லி தனது பரவச நிலையை, சந்தோஷத்தை தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் மதுபாலா.