சின்னப்பூவிற்காக பெரிய பூவிடம் கெஞ்சிய சிம்பு..!

சமீபத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி ஒன்று நடந்தது. யார்கொடுத்த பார்ட்டி, எதற்காக கொடுத்தார்கள் என்பது நமக்கு தேவையில்லாத விஷயம். ஆனால் இந்த பார்ட்டியில் நடைபெற்ற சம்பவம் தான் ஹைலைட்டான விஷயம்..

இந்த பார்ட்டியில் சிம்பு, குஷ்பூ உட்பட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்களாம். அப்போது குஷ்பூவிடம் பேசிக்கொண்டிருந்த சிம்பு, தடாலென குஷ்பூவின் கால்களில் விழுந்து அழ ஆரம்பித்து விட்டாராம். விஷயம் இதுதானாம். தன்னால் ஹன்ஷிகாவை மறக்க முடியவில்லை என்றும் ஹன்ஷிகாவை தன்னுடன் சேர்த்துவைக்கும்படியும் கெஞ்சி கேட்டுக்கொண்டாராம்.

காரணம் குஷ்பூ மீது அளவு கடந்த மரியாதை வைத்திருப்பவர் ஹன்ஷிகா. அதனால் அவர் சொன்னால் கேட்பாராம். அதேசமயம் நயன்தாரா விஷயம் குறித்து குஷ்பு சிம்புவிடம் கேட்க, அதற்கு அப்படி எல்லாம் இல்லை என விளக்கமும் அளித்தாராம்.

ஆனால் நயன்தாராவுடன் தற்போதும் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறாராம் சிம்பு. ஆனால் நயன்தாராவுக்கு லிவிங் டுகெதர் மனப்பான்மை இருக்கிறதே தவிர திருமண ஐடியாவெல்லாம் இல்லையாம். ஹன்ஷிகாவும் இல்லாமல் நயனும் இல்லாமல் இப்படி ஊசலாட்டத்தில் தன்னுடைய நிலை ஆகிவிட்டதே என நொந்துபோயிருக்கிறாராம் சிம்பு..