ஜோதிகா வழியில் குறுக்கே நிற்கும் பிருத்விராஜ்..!

ஒரு இயக்குனர் இப்படித்தான் படங்களை இயக்குவார் என ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் சிக்காமல் இருந்தால் அது அபூர்வம்.. அப்படி சிக்கிக்கொள்ளாத ஒரு அபூர்வமான இயக்குனர் தான் பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்..

2004ல் இவர் இயக்கிய ‘உதயநாணுதாரம்’ படம் அசிஸ்டென்ட் டைரக்டரின் வாழ்க்கையை பற்றிய கதை என்றால், கடந்த வருடம் இவர் இயக்கிய சூப்பர்ஹிட் படமான ‘மும்பை போலீஸ்’ ஒரு அதிரடி அசிஸ்டென்ட் கமிஷனரை பற்றியது.

விஷயத்துக்கு வருவோம்.. இந்த இரண்டு படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு பெண்ணை மையப்படுத்தி கடந்த மே மாதம் இவர் இயக்கிய ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படம் சூப்பர்ஹிட்டானதும் நடிகை மஞ்சு வாரியருக்கு ரீ என்ட்ரியாக அமைந்ததும் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

ஆனால் இந்தப்படத்தைத்தான் இப்போது தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள் என்பதும் அதில் நடிப்பதன் மூலம் தமிழில் ஜோதிகா ரீ என்ட்ரி ஆகிறார் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.. தமிழிலும் ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் இயக்குகிறார்.

ஆஹா… ஜோதிகா நடிக்க வருகிறாரா என உடனே சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டாம். காரணம் இந்த ரோஷன் ஆண்ட்ரூஸ் மீண்டும் மலையாளத்தில் பிருத்விராஜ் நடிக்கும் படம் ஒன்றை இயக்க உள்ளார். முதலில் அதை இயக்கி முடித்துவிட்டுத்தான் பிறகு ஜோதிகா நடிக்கும் படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காத்திருப்போம்..