விபத்து நடந்தாலும் கூட நடிகரை போட்டோ தான் எடுக்கணுமா?

சில தினங்களுக்கு முன் நடிகர் பிரகாஷ்ராஜ் சிறிய விபத்து ஒன்றில் சிக்கினார் தெரியுமா..? என்ன தெரியாதா..? சரியா போச்சு.. ஹைதராபாத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த பிரகாஷ்ராஜின் கார் மீது ஒரு தனியார் பஸ் மோதிவிட, பிரகாஷ்ராஜ் சிறிய அளவிலான சிராய்ப்புகளுடன் மட்டும் தப்பித்தார்.

அதேசமயம் அந்த பஸ் இன்னொரு ஆட்டோவின் மீதும் மோத, அந்த ஆட்டோவில் பயணித்தவர்களுக்கோ பலத்த காயம். ஆனால் விபத்தில் சிக்கிய காரில் இருந்தது நடிகர் பிரகாஷ்ராஜ் என்பதால் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்தவர்கள் தங்களது வேலைகளை அப்படியே போட்டுவிட்டு பிரகாஷ்ராஜையும் விபத்தையும் தங்களது மொபைல்களில் படம்பிடிக்க ஆரம்பித்துவிட்டனராம்.

ஆனால் விபத்தில் சிக்கிய ஆட்டோவில் பயணித்தவர்களை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கும் எந்த ஒரு முயற்சியிலும் யாரும் சிறிதும் முனைப்பு காட்டவில்லையாம். இதைப்பார்த்த பிரகாஷ்ராஜ், மனிதாபிமானம் என்பது மக்களிடையே மழுங்கிப்போய்க்கொண்டு இருக்கிறது என வருத்தப்பட்டு கூறியுள்ளாராம்.