பாவம்.. பிரியா ஆனந்த்துக்கு என்ன வயிற்று வலியோ.. யாருக்கு தெரியும்.?

‘எதிர்நீச்சல்’ படத்திற்கு பிறகு சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் ப்ரியா ஆனந்த் பிஸியான நடிகையாகிவிட்டார். அதர்வாவுடன் ‘இரும்புக்குதிரை’, கவுதம் கார்த்திக்குடன் ‘வை ராஜா வை’ என வளர்ந்துவரும் இளம் ஹீரோக்களுக்கு இப்போது ஜோடி இவர் தான்.

விக்ரம் பிரபுவுடன் நடித்த ‘அரிமா நம்பி’ வேறு சூப்பர்ஹிட் ஆயிற்றா..? கேட்கவா வேண்டும்..? உச்சாணிக்கொம்பில் ஏறி உட்கார்ந்து விட்டார். நேற்று நடைபெற்ற ‘இரும்புக்குதிரை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் நாயகிகளான பிரியா ஆனந்தும் ராய் லட்சுமியும் கலந்துகொண்டனர்.

கொஞ்ச நேரம் மேடையில் அமர்ந்து பல்லை காட்டிக்கொண்டு போஸ் காட்டிய பிரியா ஆனந்த் தான், பேசியவுடன் சிறிது நேரத்திலேயே மேடையைவிட்டு எஸ்கேப் ஆனார்.. கடந்த மாதம் ‘அரிமா நம்பி’ பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒரு நிருபரின் ஏடாகூடமான கேள்விகளால் டென்ஷனான பிரியா ஆனந்த் அவருடன் சண்டைக்கு போனது ஞாபகம் இருக்கலாம்..

ஒருவேளை அதுமாதிரி இந்த பிரஸ்மீட்டிலும் தேவையில்லாமல் யாராவது ஏதாவது கேட்டு விட்டுவிடுவார்களோ என நினைத்து எஸ்கேப் ஆகியிருக்கலாம்.. அப்படி இல்லையென்றால் பாவம் அவருக்கு என்ன வயிற்று வலியோ..? யாருக்குத்தெரியும்.