காயத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்த சமுத்திரகனி..!

‘நீ எல்லாம் நல்லா வருவடா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக மிக முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் இயக்குனர் சமுத்திரகனி. படத்தின் இயக்குனர் நாகேந்திரன் சமுத்திரக்கனியின் மிக நெருங்கிய நண்பர். இந்தப்படத்திற்கான சண்டைக்காட்சி ஒன்றை சமீபத்தில் கோவளத்தில் படமாக்கினார்கள்.

அப்போது சமுத்திரக்கனியின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வழக்கமாக இதுபோன்ற வலிகளை 30 நொடிகளில் சமாளித்துவிடும் சமுத்திரகனியால் இந்தமுறை ஒன்றரை நிமிடம் ஆகியும் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை.

டாக்டரிடம் சென்று பரிசோதித்தபோது அவர் சிகிச்சை அளித்ததுடன் ஒரு வாரம் கட்டாயம் ஓய்வு எடுக்கச்சொல்லி இருக்கிறார்.. ஆனால் தன்னால் படப்பிடிப்புக்கு பாதிப்போ, அதிகப்படியான செலவோ vவந்துவிடக்கூடாது என நினைத்த சமுத்திரகனி காயத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம்.