“சுதீப் படத்தில் நான் நடிக்கவில்லை” – ஹன்சிகா விளக்கம்

தெலுங்கு சினிமாவின் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடித்த ‘அத்தரிண்டிகி தாரெதி’ படம் வெற்றிகரமாக ஒன்று.. இரண்டல்ல.. 32 தியேட்டர்களில் நூறாவது நாளை தொட்ட கதையெல்லாம் பேசினால் ஒரு நாள் போதாது. இத்தனைக்கும் படம் ரிலீஸாவதற்கு முன்னரே, சில விஷமிகளால் இணையதளத்தில் இந்தப்படத்தின் ஒன்றரை மணிநேர காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அதையெல்லாம் ஊதித்தள்ளிவிட்டு இத்தனை தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடி அதற்கு முந்தைய ரெக்கார்டுகளை எல்லாம் அடித்து நொறுக்கியது என்றால் அதற்கு காரணம் பவன் கல்யாண்.. இன்னொன்று கதை..!.

தெலுங்கில் ஒரு படம் சூப்பர்ஹிட்டானால் நம்ம ஹீரோக்கள் பார்வை அந்தப்பக்கம் திரும்பாமல் இருக்குமா என்ன? ஆனால் இந்த முறை திரும்பவே இல்லை.. மாறாக கன்னட நடிகர் சுதீப்பின் பார்வை வேகமாக அந்தப்பக்கம் திரும்ப, இதோ இப்போது ‘அத்தரிண்டிகி தாரெதி’ படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் சுதீப்.

ஆனால் இப்போது ஹாட் நியூஸ் என்னவென்றால் இந்தப்படத்தில் சுதீப்புக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார் என்று சிலர் கொளுத்திப்போட்டுவிட்டார்கள். ஆனால் இந்த வதந்(தீ) புகையில் மூச்சு முட்டிய ஹன்ஷிகா, ட்விட்டர் வழியாக அலறியபடி, ‘நான் சுதீப் படத்தில் நடிக்கவில்லை.. எந்த விஷயம் என்றாலும் நான் தான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேனே” என கூறி தண்ணீர் ஊற்றி வதந்(தீ)யை அணைத்திருக்கிறார்.. ஆனாலும் இன்னும் கொஞ்ச நாளைக்கு புகையத்தான் செய்யும்.

சரி.. ‘அத்தரிண்டிக்கு தாரெதி’ படத்துக்கு தமிழில் என்ன அர்த்தம்னு தெரியுமா? அத்தை வீட்டுக்கு எந்த வழியா போகணும்” அப்படிங்கிறது தான்..