மார்க்கெட்டில் கட்டிப்புரண்டு சண்டைபோட்டார் கிஷோர்..! பொதுமக்கள் அதிர்ச்சி..!

வில்லன், குணசித்திர நடிகர், கதாநாயகன் என்கிற கணக்கெல்லாம் நடிகர் கிஷோரிடம் கிடையாது. தனக்கு கேரக்டர் பிடித்து விட்டால் இதில் மூன்றில் எதிலும் நடிக்க தயங்கமாட்டார். அப்படித்தான் இப்போது ‘காதலி காணவில்லை’ என்கிற படத்தில் கிஷோர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஹார்த்திகா ஷெட்டி நடிக்கிறார்.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்கள் இரட்டையர்களான ரவிராஜா. நம்பர் ஒன் வில்லன் வேடத்தில் நடிக்கும் சோப்ராஜிடம் அடியாளாக வேலை செய்யும் வேடத்தில் கிஷோர் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் கூடுகிற மார்கெட் பகுதியில் கிஷோர் வில்லன்களுடன் மோதும் அதிபயங்கரமான சண்டைக் காட்சியை அதிக ரிஸ்க் எடுத்து படமாக்கியுள்ளார்கள்.