அஞ்சலி பிரச்சினையே முடியல, அதுக்குள்ளே இன்னொன்னா? – தொடரும் களஞ்சிய சர்ச்சை

Kalanjiyam

இயக்குனர் களஞ்சியம் என்றாலே எப்போதும் சர்ச்சை தான். எங்கேயும் சர்ச்சை நாயகனாக வலம் வரும் இவருக்கும், அஞ்சலிக்கும் இடையேயான பிரச்சினையே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் இன்னொரு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

அஞ்சலி நடிக்க வராததால் பாதியில் நின்று கிடக்கும் ‘ஊற்சுற்றி புராணம்’ மீண்டும் தொடராததால் இப்போது அவர் நடிக்க கிளம்பி விட்டார். லாரா, கோடைமழை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கோடைமழை என்ற படத்தில் ‘கங்காரு’ படத்தின் நாயகி பிரியங்காவின் அண்ணனாக நடிக்கிறார்.

சங்கரன் கோவில் பகுதியில் நடந்து வரும் படப்பிடிப்பில் தான் பிரியங்காவை ஓங்கி அறைந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. கதைப்படி தங்கையாக நடிக்கும் பிரியங்கா, அண்ணனுக்கு பிடிக்காத ஒருவனை காதலிப்பதால் அது தொடர்பாக விவாதம் முற்றி அண்ணன் களஞ்சியம், தங்கை பிரியங்காக கன்னத்தில் அறைவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது.

படப்பிடிப்பிற்கு முன்னர் நடந்த ஒத்திகையில் களஞ்சியம் மெதுவாக அடித்தார். அதுபோல காட்சியின்போது அடிக்காமல், காட்சி படமானபோது படுயதார்த்தமாக இருக்க வேண்டும் என்று களஞ்சியம் பிரியங்காவை நிஜமாக ஓங்கி அடித்தாராம்.

இதனால் வலி தாங்காமல் மயங்கி விழுந்துள்ளார் பிரியங்கா. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பிரியங்காவுக்கு காதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.