அஜித் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜெய்பூர் மற்றும் குலுமனாலி போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது.
இந்த படப்பிடிப்பில் நடிகர் ‘அஜீத்’ முதுகுவலியிலும் பங்கேற்று கிளைமாக்ஸ் காட்சியை முடித்து கொடுத்துள்ளார். இந்த காட்சி குலுமனாலியில் படமாக்கப்பட இருந்தது. அஜீத் டெல்லியில் இருந்து குலுமனாலிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். நீண்ட தூரம் பயணம் செய்ததால் படப்பிடிப்பு தளத்தில் அஜீத்துக்கு திடீர் முதுகுவலி ஏற்பட்டது. காய்ச்சலிலும் அவதிப்பட்டார்.
ஆனால் படப்பிடிப்பை தள்ளி வைக்க முடியாத சூழலில் டைரக்டர் இருந்தார். உடனடியாக படப்பிடிப்பை துவங்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. படப்பிடிப்பு தன்னால் பாதிக்கப்படக்கூடாது என்று அஜீத் முடிவு செய்து காய்ச்சல் மற்றும் முதுகுவலியை பொருட்படுத்தாமல் நடித்தார்.
கிளைமாக்சும், மேலும் சில காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டன. அனைத்தையும் முடித்து கொடுத்தார் அஜீத். அஜீத்தின் தொழில் ஈடுபாட்டை படப்பிடிப்பு குழுவினர் வியந்து பாராட்டினர். ஜூன் மாதம் இசை வெளியீடும், ஆகஸ்டில் படமும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.