இரண்டாவது டெஸ்ட் போட்டி: தொடக்கத்திலேயே பவுலிங்கில் அபாரம் காட்டும் இந்திய அணி!

india-srilanka1212-24-1511512885

 

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

 

இலங்கை அணி இந்தியாவிற்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்து இருக்கிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.

 

தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருக்கிறது. சென்ற போட்டியில் மிகவும் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமிக்கு பதிலாக இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இஷாந்த் சர்மா இரண்டு விக்கெட்டுகளும், அஸ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். இலங்கை அணி 131 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது. சிறப்பாக விளையாடிய ‘திமுத் கருணாரத்னி’ 51 ரன்கள் எடுத்து இஷாத் சர்மா பந்தில் அவுட் ஆனார்.

Leave a Response