சிறைச் செல்லத்தயாராகும் சசிகலா கணவர் நடராஜன்! தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்டு

201711171549317150_1_natarajan._L_styvpf
சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் உட்பட 4 பேருக்கு விதிப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த 1994-ம் ஆண்டு புதிய லெக்சஸ் எனப்படும் வெளிநாட்டு சொகுசு காரை பயன்படுத்திய கார் என கூறி குறைந்த விலைக்கு இறக்குமதி செய்துள்ளார். சொகுசு கார் இறக்குமதி செய்ததில் அரசுக்கு ரூ 1.62 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது சி.பி.ஐ. சார்பில் மோசடி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் பொருளாதார சிறப்பு நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு நடராஜன் உட்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. நடராஜன் உட்பட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிசெய்து நீதிபதி உத்தரவிட்டார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலாவின் அக்கா மகள் சீதளாதேவி மற்றும் அவரது கணவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நேற்று உயர்நீதிமன்றம் உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response