சத்துணவு மையங்களில் கம்ப்யூட்டர்! கலெக்டர் மனைவி ஏற்பாடு!

ciththir

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட கலெக்டர் பிரதியும்ணா. இவருடைய மனைவி சில்பா. இவர் பங்காருபாளையம் அடுத்த மகாசமுத்திரம் கிராமத்தில் தனது குழந்தைகளான விக்கிரமாதித்தன், அவியத்யா ஆகியோருடன் அந்த அங்கன்வாடி மையத்திற்கு நேற்று சென்று பார்வையிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்:-

இங்கு உள்ள குழந்தைகளுக்கு கல்வி, பாட்டு, விளையாட்டு கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதேபோல் அனைத்து அங்கன்வாடி மையத்திலும் கற்று கொடுக்க வேண்டும். எனது சொந்த செலவில் குழந்தைகள், பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், பொம்மைகள் மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு தேவையான இருக்கைகள், கம்ப்யூட்டர் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார். அப்போது பொதுமக்கள் எங்கள் கிராமத்திற்கு சித்தூரில் இருந்து நேரடியாக பஸ் ஒன்று விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கலெக்டரின் பார்வைக்கு கொண்டு செல்கிறேன் என்றார்.

Leave a Response