“அரண்மனை’யில் என் காட்சிகள் குறைக்கப்படவில்லை” – ராய் லட்சுமி விளக்கம்

இப்போது கோலிவுட்டில் லேட்டஸ்ட் வதந்தி என்னவென்றால் இயக்குனர் சுந்தர்.சிக்கும் ராய் லட்சுமிக்கும் ஏற்பட்டிருக்கும் லடாய் தானாம். ராய்லட்சுமியுடன் எழுந்த மனஸ்தாபத்தால் கோபமான சுந்தர்.சி, தனது ‘அரண்மனை’ படத்தில் அவர் நடித்த பெரும்பாலான காட்சிகளை வெட்டித்தள்ளி விட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதை மறுத்துள்ள ராய் லட்சுமி, “எனக்கும் சுந்தர்.சிக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் மனஸ்தாபமும் இல்லை. அதே போல முழுப்படத்தையும் நான் பார்த்துவிட்டேன்.. அதில் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு துளி கூட தூக்கப்படவில்லை.. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்” என விளக்கம் அளித்துள்ளார்.