கௌரவ வேடத்தில் ஆனந்த் பாபு நடிக்கும் “ஜமாய்”!!

JAMAAI- NAND BABU 1

கிளாசிக் சினி சர்க்யூட் என்ற படநிறுவனம் சார்பாக எம்.ஜெயக்குமார் தயாரிக்கும் படம் “ஜமாய்”. இந்த படத்தில் நவீன், உதய் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக வைஜெயந்தி, நிமிஷா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

டி.பி.கஜேந்திரன், சங்கீதா பாலன், மதன் பாப், ராஜப்பா மற்றும் தீபிகா மாஸ்டர் ஆகியோர் நடிக்கிறார்கள். ராதாரவி முக்கிய வேடமேற்கிறார். இவர்களுடன் நடிகர் ஆனந்த்பாபு ஒரே ஒரு பாடல் காட்சியில் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு ஆனந்த்பாபு கதாநாயகனாக நடித்து 250 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற “பாடும் வானம்பாடி” என்ற படத்தை இயக்கியவர் எம்.ஜெயக்குமார்.

இந்த படத்தில் சிறுவன் ஒருவனுக்கு நடனம் சொல்லி தரும் மாஸ்டர் வேடத்தில் கௌரவ வேடத்தில் நடித்து தரும்படி ஆனந்த்பாபுவிடம் கேட்டாராம் இயக்குனர். மறுப்பேதும் சொல்லாமல் ஆனந்த் பாபு நடித்து கொடுத்திருக்கிறார்.

“கண்ணுக்குள் கனவிருந்தால்”

“நெஞ்சுக்குள் துணிவு வரும்” என்ற இந்த பாடல் காட்சி சமீபத்தில் அசோக் ராஜா நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.

ஒளிப்பதிவு – M.D.சுகுமார். பாடல்கள் – வாலி. இசை – தினா. கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் எம்.ஜெயக்குமார்.

கல்லூரி காதல், நடனம், மியூசிக் மூன்றையும் கலந்த கலவையாக “ஜமாய்” உருவாகிறது.