டெல்லி கற்பழிப்பு சம்பவம் “பிரீடம்” – காந்தி ஜெயந்திக்கு ரிலீஸ்!

30x20 8-2

RMS புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கும் படம் “பிரீடம்”. டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கி விட்டது. அந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து தமிழில் “பிரீடம்”. இந்தியில் “ஆஜ் கி பிரீடம்” என்ற பெயரில் படமாக்கப்பட்ட படம் தயாராகி விட்டது.

சம்பவம் நடந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட ஜோதியின் பெயரையே கதாநாயகியின் கதாபாத்திரப் பெயராகவே வைத்திருக்கிறார் இயக்குனர். இந்த படம் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியிடப்பட உள்ளதாக இயக்குனர் டான் கெளதம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, “ஒரு இந்திய பெண் உடல் முழுக்க நகைகளுடன் நள்ளிரவு சாலையில் தனியாக எப்போது நடந்து போக முடிகிறதோ அப்போது தான் முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்றார் மகாத்மா!  ஆனால் இன்றைய நிலை! பட்டப்பகலிலேயே பெண்கள் தனியாக நடமாட முடியவில்லையே!

ஜோதி வேடத்தில் தமிழ்ப்பெண் ரே நடித்திருக்கிறார். ஜோதியை பற்றி அமிதாப்பச்சன் ஒரு கவிதை எழுதி இருந்தார் அந்த கவிதையை இந்தி இசையமைப்பாளர் அனிரூத் பதக்  இசையில் பாடலாக்கி இருகிறோம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறேன் என்கிறார் டான் கெளதம்.