“புது மாப்பிள்ளை” பரத்தின் புதிய படம்!!

barath

சின்னத்திரையில் சண் டிவியில் ஒளிபரப்பாகிய ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் பிரபலமானவர் இயக்குனர் திருமுருகன். இவர் வெள்ளித்திரையில் ‘எம்டன் மகன்’, ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவருடைய இரண்டு படங்களிலும் நடிகர் பரத்-தான் ஹீரோ. வடிவேலு காமெடி கதாபாத்திரத்தில் இரண்டு படங்களிலும் நடித்திருந்தார்.

தற்போது ‘நாதஸ்வரம்’ என்ற மெகா தொடரை இயக்கி வரும் திருமுருகன் அடுத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். குடும்பக்கதை மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கவிருக்கிறார் திருமுருகன். இப்படத்தில் “புது மாப்பிள்ளை” பரத், வடிவேலு ஆகிய இரண்டு பேரும் மீண்டும் இணையவிருக்கிறார்கள். இப்படத்தின் துவக்கவிழா மற்றும் படப்பிடிப்பை விரைவில் நடத்த உள்ளனர்.

இதுகுறித்து இயக்குனர் திருமுருகன் கூறும்போது, “மெட்டி ஒலி’ மூலம் எனக்கு கிடைத்த புகழ் ‘எம்டன் மகன்’ படத்திற்கும் கிடைத்தது. அதுபோல் இப்போது ‘நாதஸ்வரம்’ தொடருக்கு கிடைத்திருக்கும் புகழ் அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கும் கிடைக்கும்” என்றார்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.