சூர்யா நடித்த “ஸ்ரீ”, ஏவிஎம் தயாரித்த “அன்பே அன்பே” போன்ற படங்களுக்கு கதை, வசனம் எழுதிய சஞ்சய்ராம் “தூத்துக்குடி, பூவா தலையா, கௌரவர்கள், வீரமும் ஈரமும்” போன்ற படங்களை இயக்கியதுடன் சில படங்களை தயாரித்தும் உள்ளார்.
தற்போது 23 செல்லுலாய்ட் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் “கிளியாந்தட்டு ” – தூத்துக்குடி – 2” என்ற படத்தில் கதை நாயகனாக நடித்து இயக்குகிறார் சஞ்சய்ராம். இவரது கதாபாத்திரத்திற்கு தோன்டி பாபு என்று பெயரிட்டுள்ளார்.
இன்னொரு நாயகனாக குகன் சக்ரவர்த்தி நடிக்கிறார். ராஜரத்தினம் அண்ணாச்சி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார். சஞ்சய் ராம் ஜோடியாக மஞ்சுகா என்ற புதுமுகம் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். குகன் சக்ரவர்த்தி ஜோடியாக அலினா ஷேக் என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களைத் தவிர மற்ற நடிகர் நடிகைகள் அனைவரும் புதுமுகங்கள்.
திரைப்படக் கல்லூரி மாணவர் ரா.சக்தி சிவபாலன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல இசை மேதை கோபாலகிருஷ்ணனின் மகன் ஜி.ராம் இசை அமைக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் தமிழகத்தையே உலுக்கிப் போட்ட நிஜ சம்பவத்தை கதைக் கருவாக்கி உள்ளார். படு த்ரில்லிங் படமாகவும், காதல் கலந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், பாண்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார் சஞ்சய்ராம். விரைவில் திரைக்கு வருகிறது “கிளியாந்தட்டு” – தூத்துக்குடி – 2” என்கிறார் சஞ்சய் ராம்.