பூஜையுடன் துவங்கியது வடிவேலுவின் ரீ-என்ட்ரி!!

IMG_0231

நீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு நடிக்கும் படம் “ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்”. இந்த படத்தில் வெறும் காமெடியன் அல்ல, இவர் தான் ஹீரோ. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போல இதுவும் ஒரு நகைச்சுவை கலந்த சரித்திர படம். இந்த படத்திலும் கதாநாயகனாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் வடிவேலு. படத்தின் புதிய ஒளிப்பதிவாளராக ராம்நாத் ஷெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் படம் முதல் ஷெட்யூல் தொடங்கும் போது வடிவேலுவுக்கும் படத்தின் இயக்குநர் யுவராஜுக்கும் மோதல், ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனுக்கும் இயக்குநர் யுவராஜுக்கும் ஒத்துவரவில்லை என செய்திகள் வெளியாகின. இதனால் வடிவேலு, மீண்டும் மதுரைக்குப் போய் தங்கிவிட்டார். படப்பிடிப்பும் நின்று போனது.

இந்த நிலையில் படத்திலிருந்து ஆர்தர் வில்சனை நீக்கி விட்டு, அவருக்குப் பதில் ராம்நாத் ஷெட்டியை நியமித்து மே 20, 2013 முதல் பூஜையுடன் படப்பிடிப்பை ஆரம்பித்தது AGS நிறுவனம்.

வடிவேலுவின் “ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்” படம் தவிர மற்றும் இரண்டு படங்களுக்கு சில தினகளுக்கு முன்பு பூஜை போட்டு படப்பிடிப்பை துவக்கியுள்ளது AGS.