சி.ஐ.டி. அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கும் “எனை சுடும் பனி”…

எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “எனை சுடும் பனி” என்று பெயரிட்டுள்ளனர்..

இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய “டீ கடை பெஞ்ச்” படத்தில் இரண்டாவது கதா நாயகனாகவும், “என் காதலி சீன் போடுறா ” படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்திலும் நடித்தவர். இந்த படத்தின் மூலம் கதா நாயகனாக உயர்வு பெறுகிறார்.

இப்படத்தில் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரியாக வேடமேற்கிறார்.

கதா நாயகிகளாக உபாசனா RC , சுமா பூஜாரி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம்புலி, மனோபாலா, சித்ராலட்சுமணன், தலைவாசல் விஜய், கானா சரண் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு ராம்ஷேவா வசந்த் மற்றும் கானா சரண் பாடல்களை எழுத, அருள்தேவ் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு கலை பணியை அன்பு மேற்கொள்ள, டேஞ்சர் மணி சண்டை காட்சிகளை அமைகின்றன.

படத்தின் நடன காட்சிகளை சாண்டி ,சிவசங்கர், லாரன்ஸ் சிவா ஆகியோர் இயக்குகின்றனர்.

ஒளிப்பதிவை வெங்கட் மேற்கொள்ள, கதை திரைக்கதை வசனம் ஆகியவற்றை ராம்ஷேவா எழுதி இயக்க, எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பாக இப்படம் தயாராகிறது

படத்தின் துவக்கவிழா சென்னையில் படப்பிடிப்புடன் துவங்கியது.

படத்தை பற்றி இயக்குனர் ராம்ஷேவாவிடம் கேட்டோம். அப்போது அவர் நம்மிடம் கூறியதாவது, “சின்ன வயதிலிருந்தே ஒன்றாக படித்து பழகியவர்கள் வெற்றியும் உபாசனாவும்…

உபாசனா தானே முயற்சி செய்து உழைத்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்கிறார்.

வெற்றி சாதாரண நிலையில் இருந்தாலும் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது.

அவர்களுக்கு நடுவே வில்லனாக ஒருவன்.

அதற்கு பிறகு நடக்கும் சம்ப்வங்கள் என்ன என்பது திரைக்கதை சுவாரஸ்யம்.

இந்த திரைக்கதையில் நடந்த ஒரு கிரைம் சம்பவத்தை பாக்யராஜ் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதும் படத்தின் சுவாரஸ்யம்.

படப்பிடிப்பு சென்னை, கேரளா, பொள்ளாச்சி, நெல்லியம்பதி மற்றும் அம்பாசமுத்திரம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது.” இவ்வாறு இயக்குநர் ராம்ஷேவா நம்மிடம் தெரிவித்தார்.

Leave a Response