ஐஸ்வர்யாவை தொடர்ந்து மகத்துடன் ஜோடி சேரும் யாஷிகா..!

இந்தியாவின் பெறும் மாநகராட்சியில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் முக்கிய பிரச்சனையின்  பின்புலத்தை அடிப்படையாக கொண்டு இன்றைய காலத்திற்கேற்ப கமர்ஷியல் கதையம்சத்தில் அரசு அலர்ச்சிய போக்கையும் அழமான சமுக கருத்தையும் கெண்டு உருவாகிறது “பரதன் பிக்சர்ஸ் புரொடக்சன் நம்பர் 2”.
உண்மை சம்பதத்தை அடிப்படையாக கொண்ட Horror – Suspense Thriller உருவாகும் இப்படத்தின் படப்பூஜை பிரசாத் லேப்பில் இனிதே நடைபெற்றது. பரதன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் பரதன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர்கள் மேக்வென் (மகேஷ் – வெங்கட்) இயக்குகிறார்கள்.
மஹத் ராகவேந்திரா கதாநாயகனாகவும் நடிகை யாஷிகா நடிக்கின்றனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல முன்னனி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் உருவாகிறது. சென்னை மற்றும் பெங்களூருவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

Leave a Response