தமிழக ஆளுனருடன் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திடீர் சந்திப்பு..!

தமிழக ஆளுனருடன் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திடீர் சந்திப்பு நடத்தி இருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில் உள்ள பள்ளிவாசல் பகுதி ஒன்றில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத போலீசையும், நீதிமன்றத்தையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கொச்சையாக திட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். ஆனால் இவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் தற்போது தமிழக ஆளுனருடன் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திடீர் சந்திப்பு நடத்தி இருக்கிறார். ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார் எச்.ராஜா.

சுமார் அரைமணி நேரம் சந்திப்பு நடைபெற்றது. எச்.ராஜாவை தனிப்படை போலீஸ் தேடி வரும் நிலையில் சந்திப்பு நிகழ்ந்து இருக்கிறது.

இதில் அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response