கலை வாரிசுகளின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. புதிதாக அறிமுகமாகும் நாயகன் ஜெமினி கணேசன் – சாவித்திரியின் பேரன் அபிநய்.
ஜெமினிகணேசன் – சாவித்திரி வாரிசான இவர் யங் இந்தியா என்ற தெலுங்கு படத்தில் தாசரி நாராயண ராவால் அறிமுகப்படுத்தபட்டவர். இந்தியாவின் முதல் தர டென்னிஸ் வீரராக இருந்துள்ளார் அபிநய்.
நாயகனும், நாயகியும் விளம்பர படம் எடுப்பது தொடர்பாக மலேசியா வருகிறார்கள். நாயகன் தனது பழைய காதலியை சந்திக்க, நாயகியோ தனது சிறுவயது தோழியை சந்திக்க இருவருக்கும் ஏற்பட்ட குழப்பத்தில் பல விபரீத முடிவுகள் ஏற்படுகிறது. இதிர்லிருந்து நாயகியும் நாயகனும் எப்படி மீள்கிறார்கள் என்பதே கதை சுருக்கம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், புத்திரஜெயா மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது.