பெண் சிங்கக் குட்டிக்கு “ஜெயா” என பெயர் சூட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

வண்டலூர் பூங்காவில் உள்ள 6 மாத பெண் சிங்கக்குட்டிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயா என பெயர் சூட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில், பிறந்து 6 மாதமான சிங்கக்குட்டிக்கு பெயர் சூட்டும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

நிலா என்ற பெண் சிங்கத்திற்கும், சிவா என்ற ஆண் சிங்கத்திற்கும் 6 மாத பெண் சிங்கக் குட்டி உள்ளது. ஜெயலலிதாவின் தீவிர பக்தரான எடப்பாடி பழனிசாமி, பெயர் சூட்டும் விழாவில், அந்த பெண் சிங்கக்குட்டிக்கு ஜெயா என பெயர் சூட்டினார்.

Leave a Response