கேரளா முதல்வர் மற்றும் அனைத்து கட்சி குழுவினர் இன்று பிரதமரை சந்திக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அனைத்துக்கட்சி குழுவினர், இன்று (19ம்) பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை தொடர் குறித்த கஸ்தூரி ரங்கன் அறிக்கையை செயல்படுத்துவது, கஞ்சிகோடு ரயில் பெட்டி தொழிற்சாலை, சபரிமலை ரயில் திட்டம், கேரளாவுக்கான உணவு தானிய ஒதுக்கீட்டு அளவை அதிகரிப்பது உட்பட முக்கிய பிரச்னைகள் குறித்த பிரதமரிடம் அனைத்து கட்சி குழுவினர் பேச உள்ளனர்.
இத்தகவலை டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.