முன்னணி நடிகைகள் வாயை திறந்தால் பல உண்மைகள் வெளியே வரும்-நடிகை ஸ்ரீரெட்டி பகீர் தகவல்..!

தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், மேலும் நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி கூறியிருந்தார்.

தற்போது சினிமாத்துறையில் நடித்துக்கொண்டிருக்கும் முன்னணி டாப் நடிகைகள் தனது வாயை திறந்து உண்மையை கூறினால், பல உண்மைகள் வெளியே வரும் என நடிகை ஸ்ரீரெட்டி பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

Leave a Response