சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு-முதல்வர் அறிவிப்பு..!

சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க ரூ.100 கோடி செலவில் அடையாறு – கூவம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் ஆற்றிய உரையில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவகம் ரூ.4 கோடியில் சீரமைக்கப்படும் என்றார்.

சென்னையில் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க அடையாறு – கூவம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்றார். இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக கூறினார். பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறும் என்றார்.

 

Leave a Response