2 வருடங்களுக்குள் சாலை விபத்துகளைப் பாதியாகக் குறைக்க இலக்கு-எம்.ஆர்.விஜய பாஸ்கர்..!

தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை வருகிற 2020 ஆம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க இலக்காக கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், தமிழகத்தில் சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார். மேலும், அவர் சாலை பாதுகாப்பு விதிகளை மாணவர்களுக்கு ஆரம்ப நிலையில் இருந்தே கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளைக் குறைப்பது பற்றி பேசிய எம்.ஆர். விஜய பாஸ்கர், “வருகிற 2020 ஆம் ஆண்டுக்குள் விபத்துகளை பாதியாகக் குறைக்க இலக்காக கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Response