விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறப்பு..!

கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழக பாடத்திட்டத்தில் இன்று (1ம் தேதி) முதல், 2018 – 19ம், கல்வி ஆண்டு துவங்குகிறது. தமிழக பாடத்திட்டத்தில் படிப்போருக்கு, ஒவ்வொரு வருடமும், ஜூனில் கல்வி ஆண்டு துவங்கி, மே மாதம் முடிவடையும்.

ஏப்ரலில் பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படும். இதன்படி, 2017 – 18ம் கல்வி ஆண்டில், பொது தேர்வுகளும், ஆண்டு இறுதி தேர்வுகளும் முடிந்து, அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஏப்ரல், 21ல் துவங்கிய 41 நாட்கள் தொடர் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி, இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.

மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு, இலவச சீருடைகள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. சில தனியார் பள்ளிகள் மட்டும், பள்ளி திறப்பை 4ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளன.

Leave a Response