சட்டம் ஒழுங்கு குறித்து பேச திமுக-வுக்கு தகுதி இல்லை-அமைச்சர் ஜெயக்குமார்..!

அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மண்ணடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டம் ஒழுங்கு குறித்து திமுக விமர்சிப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், சட்டம் ஒழுங்கு குறித்து திமுக பேசக்கூடாது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பது மக்களுக்கு தெரியும்.

சென்னை சென்ட்ரல் ஜெயிலில் ஜெயிலர் எரித்து கொல்லப்பட்டது, சென்னை சட்டக்கல்லூரி மோதல், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மண்டை உடைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமைச்சர் முன்னிலையில் கொல்லப்பட்டது, இவை எல்லாம் திமுக ஆட்சியில் அரங்கேறியது.

தற்போது தமிழகம் அமைதி பூங்காவாக செயல்படுகிறது. திமுக ஆட்சியில் காவல்துறை செயல்பட முடியாத நிலையில் இருந்தது.

திமுக ஆட்சியில் டிசம்பர் 6 வரும்போதெல்லாம் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

Leave a Response