15 வயது சிறுமியை மிரட்டி பலமுறை கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் !

திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் விஜயன் (55), ஆட்டோ டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தன தேவி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

விஜயன் அடிக்கடி சாந்தி வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளர். இதற்கிடையில், சாந்தியின் 15 வயது மகள் மீது விஜயனுக்கு ஆசை ஏற்பட்டது. அந்த சிறுமியையும் அனுபவித்தே ஆகவேண்டும் என்று திட்டம் போட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால், சாந்தி நேற்று தனது மகளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது, மகள் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார் சாந்தி.

கர்ப்பமானது எப்படி என மகளிடம் கேட்டபோது, ஆட்டோ டிரைவர் விஜயன் தான் காரணம் என கூறினார். இதுகுறித்து சாந்தி பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து  விஜயனை கைது செய்து விசாரித்தனர்.

அதில், சாந்தியின் மகளை தினசரி தனது ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்றபோது, பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், இதுபற்றி வெளியில் கூறினால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். இதனால், பயந்துபோன சிறுமி இதுபற்றி தாயிடம் தெரிவிக்கவில்லை. இதை பயன்படுத்தி பலமுறை அந்த சிறுமியை அனுபவித்துள்ளார். இதில், சிறுமி கர்ப்பமானது தெரிந்தது. இதையடுத்து, போலீஸார் விஜயனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Response