4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோவாகும் இயக்குநர் விக்ரமனின் நாயகன் !!

இயக்குநர் விக்ரமன் இயக்கிய “நினைத்தது யாரோ” படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ரேஜித். அதற்கு பிறகு சில மலையாளப் படங்களில் நடித்தவர், மலையாள சீரியல் நடிகர் ஆனார். 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்தவர், தற்போது “எம்பிரான்” என்ற படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக திரும்பியிருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா ப்ரீத்தி அறிமுகமாகிறார். இவர்களுடன் மவுலி, கல்யாணி நடராஜன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம், மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள். “தடையற தாக்க”, “மீகாமன்” படங்களில் மகிழ் திருமேனியின் உதவியாளராக பணியாற்றிய கிருஷ்ண பாண்டி இயக்குகிறார். பிரசன் பாலா இசை அமைக்கிறார், புகழேந்தி ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை, புதுச்சேரி, ஐதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஜூலை மாதம் படம் வெளிவருகிறது.

Leave a Response