காவிரி விவகாரம்: டிராபிக் ராமசாமி சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை சேப்பாக்கத்தில் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் போராட்டக்களமாக மாறியுள்ளது.

அந்தவகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, மக்கள் பாதுகாப்பு கழகத்தின் நிறுவன தலைவர், டிராபிக் ராமசாமி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதே போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, கடந்த மார்ச் 31 ஆம் தேதி திருச்சியில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Response