குட்டிப்புலி பார்த்து கண்கலங்கிய சசி!

Sasikumar-E-E

சசிகுமார், லக்ஷ்மி மேனன் நடிப்பில் முத்தையா இயக்கியிருக்கும் படம் குட்டிப்புலி. சசிகுமாரின் அம்மாவாக நடித்துள்ளார் சரண்யா. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் வழங்க, ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். வில்லேஜ் தியேட்டர்ஸ் எஸ்.முருகானந்தம் தயாரித்துள்ளார்.

’குட்டிப்புலி’ என்பவர் ராஜபாளையத்தில் வாழ்ந்த ஒரு மனிதர். அவருடைய உண்மையான கதையைத் தழுவியே குட்டிப்புலி பாத்திரத்தை செதுக்கி இருக்கிறார் இயக்குனர். குட்டிப்புலி’ படத்தில் முதன் முறையாக கம்பு சுற்றும் விளையாட்டு வீரராகக் களமிறங்குகிறார் சசிகுமார். இதற்காக அவர், ராஜபாளையத்தைச் சேர்ந்த பிரபல சிலம்பு வீரரிடம் இரண்டு மாதங்கள் பயிற்சி எடுத்திருக்கிறார்.

குட்டிப்புலி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை வேறு எந்த ஹீரோக்களுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். சரண்யாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அந்தக் காட்சியைப் பார்த்து சசிகுமார் கண்கலங்கி விட்டாராம். ‘சசி என்னோட உண்மையான புள்ளை” என நெகிழ்ந்திருக்கிறார் சரண்யா. ஒவ்வொரு படத்திலும் யதார்த்தமாக வசனம் பேசும் சசிகுமார் இந்தப் படத்தில் பேசும் வசனம் ‘வொய்ஃபுதான்டா லைஃப்’!